செய்திகள்
காட்டுக்குப்பத்தில் வேன் மோதி தொழிலாளி பலி
காட்டுக்குப்பத்தில் வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் பேட் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது சைக்கிளில் காட்டுக்குப்பம் துணை மின் நிலையம் அருகே சென்ற போது, கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வேன் எதிர்பாராத விதமாக மூர்த்தியின் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.