செய்திகள்
வில்லியனூரில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் கைது
வில்லியனூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்கள் திருடி வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் புறவழிச்சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை வழிமறித்து விசாரித்தனர். இதில், அதை திருடிக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில், கீழஅக்ரகாரத்தை சேர்ந்த ரகு (வயது 34), வில்லியனூர் மூர்த்திநகர் ராஜவேல் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.