செய்திகள்
கொள்ளை

மூலக்குளத்தில் டீக்கடையை உடைத்து பணம் திருட்டு

Published On 2020-12-08 08:29 IST   |   Update On 2020-12-08 08:29:00 IST
மூலக்குளத்தில் டீக்கடையை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்குளம்:

மூலக்குளம் பாரிஸ்நகர் பெரம்பை ரோட்டை சேர்ந்தவர் ஜோசப் (வயது 41). இவர் தனது வீட்டையொட்டி டீக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து டீக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைத்து இருந்த ரூ.30 ஆயிரத்தை யாரோ திருடி இருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News