செய்திகள்
தற்கொலை

கீழ்வேளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2020-12-05 16:57 IST   |   Update On 2020-12-05 16:57:00 IST
கீழ்வேளூர் அருகே வேலைக்கு செல்லாததை குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ஆத்தூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மணி (வயது50). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என குடும்பத்தினர் திட்டியதாக தெரிகிறது. 

இதனால் மனமுடைந்து சம்பவத்தன்று மணி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News