செய்திகள்
கோப்புபடம்

விக்கிரமங்கலம் அருகே வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

Published On 2020-12-04 14:26 GMT   |   Update On 2020-12-04 14:26 GMT
விக்கிரமங்கலம் அருகே வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செங்குழி மலை மேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 25). விவசாயி. தத்தனூர் குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (33). இவர் விக்னேஷின் அக்காள் கணவர் ஆவார். அசோக்கிற்கும், அவரது மனைவி சாந்திக்கும் இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சாந்தி தனது கணவரை விட்டுப் பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சாந்தியின் வீட்டிற்கு வந்த அசோக், சாந்தியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது சாந்தியின் தம்பி விக்னேசுக்கும், அசோக்குக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில், அசோக் விக்னேசை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ், அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News