செய்திகள்
சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா போலீசார் சமுத்திரம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்றதாக அதேப் பகுதியை சேர்ந்த செல்வி (வயது 45), தேனிமலையை சேர்ந்த பரந்தாமன் (42) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.