செய்திகள்
கைது

வாணாபுரத்தில் டிராக்டர் திருடியவர் கைது

Published On 2020-12-04 10:31 GMT   |   Update On 2020-12-04 10:31 GMT
வாணாபுரத்தில் டிராக்டர் திருடியவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
வாணாபுரம்:

வாணாபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் தனது விவசாய நிலத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி டிராக்டர் மூலம் விவசாயப் பணி செய்து முடித்த பிறகு டிராக்டரை நிலத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டு சென்றார். அடுத்தநாள் காலையில் நிலத்திற்கு வந்தபோது அங்கு நிறுத்தியிருந்த டிராக்டரை காணவில்லை. இது குறித்து அவர் வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வேலையாபாக்கம் கலர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவருடைய மகன் முருகன் (38) என்பவர் டிராக்டரை திருடிச்சென்று அவரது வீட்டின் பின்பகுதியில் நிறுத்தியிருப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்த சக்திவேல் (37). இவர் அந்தப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்து முருகனிடம் விற்றதாக தெரிகிறது. அதன்பேரில் போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News