செய்திகள்
கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2020-12-04 07:56 GMT   |   Update On 2020-12-04 07:56 GMT
மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அம்மாமணி என்கிற மணிகண்டன்(வயது 35) என்பவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல கஞ்சா விற்ற சித்தர்காடு தண்டாயுதபாணி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் வினோத் என்கிற வினோத்குமார்(34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன், வினோத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News