செய்திகள்
கிருஷ்ணகிரியில் சிறுமி கடத்தல்- வாலிபர் மீது புகார்
கிருஷ்ணகிரியில் 13 வயது சிறுமி கடத்தியது தொடர்பாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த 13 வயது சிறுமி வேப்பனப்பள்ளி அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, தீர்த்தம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோருடன் அந்த சிறுமி இருந்துள்ளார். கடந்த மாதம் 21-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தனது மகளை, வேப்பனப்பள்ளி அருகே உள்ள தரணிசந்திரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பூபதி (வயது 23) என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றிருக்கலாம். அவரிடமிருந்து தங்களது மகளை மீட்டு தருமாறு கூறி இருந்தனர். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து, பூபதி மற்றும் சிறுமியை தேடி வருகிறார்.
கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த 13 வயது சிறுமி வேப்பனப்பள்ளி அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, தீர்த்தம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோருடன் அந்த சிறுமி இருந்துள்ளார். கடந்த மாதம் 21-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தனது மகளை, வேப்பனப்பள்ளி அருகே உள்ள தரணிசந்திரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பூபதி (வயது 23) என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றிருக்கலாம். அவரிடமிருந்து தங்களது மகளை மீட்டு தருமாறு கூறி இருந்தனர். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து, பூபதி மற்றும் சிறுமியை தேடி வருகிறார்.