செய்திகள்
கைது

காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2020-12-03 15:11 IST   |   Update On 2020-12-03 15:11:00 IST
காவேரிப்பட்டணம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணும், தொட்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த அறிவுநிதி (வயது 25) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது அறிவுநிதி, அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அடிக்கடி விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறிய போது, அறிவுநிதி மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவேரிப்பட்டணம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து, அறிவுநிதியை கைது செய்தார்.

Similar News