செய்திகள்
கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

Published On 2020-12-03 09:24 GMT   |   Update On 2020-12-03 09:24 GMT
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர் மாதன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பழனி, வட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடத்தில் முன்னுரிமை அடிப்படையில் 4 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News