செய்திகள்
கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி

கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி- கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2020-12-03 09:11 GMT   |   Update On 2020-12-03 09:18 GMT
கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் நிலை சரிப்பார்ப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக 1,860 வாக்குப்பதிவு எந்திரங்கள் (வி.வி.பேட். 1,300, கன்ட்ரோல் யூனிட் 560) கொண்டு வரப்பட்டன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் நிலை சரிப்பார்ப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் கற்பகவள்ளி, தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள பேலட் யூனிட் 2,567, கன்ரோல் யூனிட் 422, வி.வி.பேட். 459 என மொத்தம் 3,448 வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணியை பெல் நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் மேற்கொண்டனர்.
Tags:    

Similar News