செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே மாணவி தீக்குளித்து தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் 10 ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியை அடுத்த தொட்டபூவத்தி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் வித்யா (வயது 16). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை என தெரிகிறது. இதனை அவருடைய பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த மாணவி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை, பெற்றோர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.