செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூர் கால்மாட்டு தெருவில் நேற்று லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுவதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் யூசுப் (வயது33) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதுமான் யூசுப்யை கைது செய்தனர்.