செய்திகள்
வேதாரண்யம் அருகே தூக்கில் முதியவர் பிணம்
வேதாரண்யம் அருகே தூக்கில் முதியவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கோமதிக்கண்ணன் (வயது70). இவர் தற்சமயம் குடும்பத்துடன் தேத்தாக்குடி வடக்கு கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கோமதிக்கண்ணன் மூங்கில் புல்லாங்குழலை கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 28-ந்தேதி வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் வேதாரண்யம் அருகே பூப்பட்டி-மறைஞாயநல்லூர் உச்சகட்டளை ரோட்டில் ஒரு மரத்தில் கோமதிக்கண்ணன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோமதிக்கண்ணனின் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதிக்கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.