செய்திகள்
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள செருதியூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 29). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.