செய்திகள்
பாகலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பாகலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
பாகலூர் போலீசார், வெங்கடேசபுரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பிகிலி கிராமத்தை சேர்ந்த முனிகிருஷ்ணா (வயது 37), சங்கரப்பா (45), ராமமூர்த்தி (36), எல்லப்பன் (31), நரசிம்மன் (27) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.