செய்திகள்
கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது

Published On 2020-11-30 05:52 GMT   |   Update On 2020-11-30 05:52 GMT
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே குற்றம்பொருத்தான் இருப்பு கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகே சாராயம் விற்ற பழையனூர் மேல்பாதியை சேர்ந்த நிஜலிங்கம்(வயது26), சங்கமங்கலம் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற திருப்பூண்டி காரைநகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் (24), புதுச்சேரி வடக்கு தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தங்கையன் (46) அகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News