செய்திகள்
மருத்துவ முகாம்

தலைஞாயிறு அருகே கால்நடை மருத்துவ முகாம்

Published On 2020-11-30 11:15 IST   |   Update On 2020-11-30 11:27:00 IST
தலைஞாயிறு அருகே ஓரடியம்புலம் கிராம பகுதியில் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வாய்மேடு:

தலைஞாயிறு அருகே ஓரடியம்புலம் கிராம பகுதியில் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சுமதி தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் 50 பசுக்களுக்கும், 40 வெள்ளாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம் தடுப்பூசி போடப்பட்டது. முடிவில் கால்நடை மருத்துவர் ஸ்ரீதர் பாபு நன்றி கூறினார்.

Similar News