செய்திகள்
கைது

திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

Published On 2020-11-29 06:31 GMT   |   Update On 2020-11-29 06:31 GMT
திருச்சி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி மலைக்கோட்டை வள்ளுவர் நகரை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 44). இவர் விவேகானந்தா நகர் வாத்தியார் குளம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக மலைக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.400-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ராஜாவை (43) திருவானைக்காவல் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News