செய்திகள்
கோப்புபடம்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 178 பேர் மீது வழக்கு

Published On 2020-11-28 08:33 GMT   |   Update On 2020-11-28 08:33 GMT
காரைக்குடி அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 178 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி:

காரைக்குடி அண்ணா சிலை அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தடை உத்தரவு அமலில் இருக்கும் போது ஏ.ஐ.டி.யு.சி மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன் உள்பட அனைத்துக்கட்சியை சேர்ந்த 157 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அதிகாரி அபிநயா வடக்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் 157 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல் சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல் மேட்டுக்கடைப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, மாவட்ட குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் உள்பட 21 பேர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இவர்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News