செய்திகள்
பண்ருட்டி அருகே சுவரில் துளைபோட்டு அடகு கடையில் கொள்ளை
பண்ருட்டி அருகே சுவரில் துளைபோட்டு அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
விழுப்புரம் அக்பர் நகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் நகை கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.
கடையின் சுவரின் 1½ அடி அகலத்தில் துளை போட்டனர். பின்னர் கடைக்குள் சென்று அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
25-ந் தேதி நேற்று காலை கடைக்கு பாலமுருகன் வந்தார். அப்போது சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த டி.வி., கண்காணிப்பு கேமரா, வெள்ளி-தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து பாலமுருகன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.