செய்திகள்
108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்

கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

Published On 2020-11-24 11:31 GMT   |   Update On 2020-11-24 11:31 GMT
சிவகங்கை மாவட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட 3 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவைகளை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறையின் மூலம் 108 ஆம்புலன்ஸ் வாகன சேவைக்கான புதிய வாகனங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் அரசு குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே 20 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த 3 வாகனங்களும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கும், எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கும், சருகனி ஆரம்ப துணை சுகாதார மையத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் குடும்பநலத்துறை டாக்டர் யோகவதி, மாவட்ட 108 வாகனசேவை மேலாளர் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 40 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

Tags:    

Similar News