செய்திகள்
கோப்புபடம்

அரிமளம் அருகே கணவன்-மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Published On 2020-11-23 09:04 GMT   |   Update On 2020-11-23 09:04 GMT
அரிமளம் அருகே கணவன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:

அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி மேல்நிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் மனைவி அந்தரி (வயது 48). இவருக்கு சொந்தமான வீட்டிற்கு எதிரே உள்ள இடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன்கள் வேலுச்சாமி, ராஜா மற்றும் ராஜா மகன் சேகர் ஆகியோர் முள்வேலி அமைத்துள்ளனர். 

இதையடுத்து அந்தரி அங்கு சென்று ஏன் இங்கே முள் வேலி அமைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதில் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வேலுச்சாமி, ராஜா, சேகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்தரியை கம்பால் தாக்கி அவருடைய கணவரை கன்னத்தில் அறைந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து அந்தரி கே. புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News