செய்திகள்
வாக்காளர் சேர்ப்பு குறித்து கலெக்டர் ஆய்வு நடத்திய போது எடுத்த படம்.

சிவகங்கை அருகே வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு

Published On 2020-11-23 06:33 GMT   |   Update On 2020-11-23 06:33 GMT
சிவகங்கை அருகே இடையமேலூர் ஊராட்சியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
சிவகங்கை:

சிவகங்கை அருகே இடையமேலூர் ஊராட்சியில் வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார். அங்குள்ள வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கை விவரம், நீக்கல் விவரத்தை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, கடந்த 16-ந்தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள்ளிட்டவைகளுக்காக சிறப்பு முகாம் நடந்தது. இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். அடுத்த மாதம் 12, 13-ந்தேதிகளில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

புதிய வாக்காளர்களுக்கான பெயர் சேர்த்தல் படிவம்-6, பெயர் நீக்கத்திற்கான படிவம் -7, பெயர் திருத்தத்திற்கான படிவம்- 8, முகவரி மாற்றத்திற்கான படிவம் -8 யு ஆகிய படிவங்கள் உள்ளன.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கலெக்டருடன் சிவகங்கை தாசில்தார் மைலாவதி, வட்ட துணை ஆய்வாளர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர்கள் லெனின் (சிவகங்கை), கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News