செய்திகள்
தற்கொலை

கந்தர்வகோட்டை அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-11-21 16:25 IST   |   Update On 2020-11-21 16:25:00 IST
கந்தர்வகோட்டை அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை அம்பலகாரர் தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 35). மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News