செய்திகள்
கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் டாக்டர் தம்பதியிடம் 13 பவுன் நகை கொள்ளை

Published On 2020-11-11 09:01 GMT   |   Update On 2020-11-11 09:01 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி முனையில் டாக்டர் தம்பதியிடம் 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்துர் ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 40). பிசியோதெரபி டாக்டர். இவரது மனைவி ஜோஸ் அனிஸ்டல் (37). ஓமியோபதி டாக்டர். அருள் தாஸ், மற்றும் ஜோஸ் அனிஸ்டல் இருவரும் வீட்டின் முன் பகுதியில் கிளினிக் வைத்துள்ளனர்.

நேற்று அதிகாலை அருள் தாஸ் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 4 பேர் வீட்டின் மாடி கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். சத்தம் கேட்டு அருள் தாஸ் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து எழுந்தனர். வீட்டில் புகுந்த மர்மநபர்கள் கத்திமுனையில் டாக்டர் தம்பதியை மிரட்டி பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர். அருள்தாஸ் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கொள்ளையர்கள் செல்லும்போது கண்காணிப்பு கேமரா பதிவை எடுத்து சென்றனர். கொள்ளையர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து இருந்தனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News