செய்திகள்
இலங்கையில் இருந்து படகில் வந்த குடும்பம்

இலங்கையில் இருந்து படகில் வந்த குடும்பம்- கைது செய்து போலீசார் விசாரணை

Published On 2020-11-07 09:58 IST   |   Update On 2020-11-07 09:58:00 IST
இலங்கையில் இருந்து படகில் வந்திறங்கிய குடும்பத்தினரிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:

இலங்கையில் இருந்து படகில் வந்திறங்கிய குடும்பத்தினரிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில், இலங்கை திரிகோணமலையில் இருந்து முகமது அன்சாரி, சல்மா வேகம் மற்றும் இவர்களது பத்து வயது மகன் ஆகியோர் சவுக்கு ப்ளாட் கடற்கரை பகுதிக்கு படகில் வந்தனர். தகவலறிந்து வந்த வேதாரண்யம் கடலோர காவல்படையினர், கியூ பிரான்ச் போலீசார் அவர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News