செய்திகள்
சிவா

அரியலூரில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி

Published On 2020-11-03 18:17 GMT   |   Update On 2020-11-03 18:17 GMT
அரியலூரில் எதிர்பாராத விதமாக மெக்கானிக் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாமரைக்குளம்:

அரியலூர் தியாகி ஜெயராமன் தெருவை சேர்ந்தவர் விஜய். இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இங்கு அரியலூர் மேல தெருவை சேர்ந்த காமராஜ் மகன் சிவா (வயது 15) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று காலையில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்ய சுவிச்சை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக சிவா உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிவாவின் தந்தை 5 வருடங்களுக்கு முன்பு இறந்ததால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மெக்கானிக் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News