செய்திகள்
கோப்புபடம்

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2020-11-03 19:45 IST   |   Update On 2020-11-03 19:45:00 IST
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே வலிவலம் பகுதியில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வலிவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடியாலத்தூர் பாலம் அருகே சாராயம் விற்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், வலிவலம் கொடியாலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ராமதாஸ் (வயது48) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News