செய்திகள்
கோப்புபடம்

பண்ருட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

Published On 2020-11-03 14:09 IST   |   Update On 2020-11-03 14:09:00 IST
பண்ருட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்தார்.
பண்ருட்டி:

பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் காலனியை சேர்ந்தவர் ஆரோக்கிய பிரபாகரன்(வயது 30). இவருக்கும் அழகப்ப சமுத்திரத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகள் கரோலின் சிறுமலர்(24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் ஆரோக்கிய பிரபாகரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கரோலின் சிறுமலர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கரோலின் சிறுமலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கரோலின் சிறுமலர் தந்தை அந்தோணிசாமி காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News