செய்திகள்
கோப்புபடம்

புவனகிரி அருகே இரு தரப்பினரிடையே தகராறு - 7 பேர் கைது

Published On 2020-11-01 16:39 IST   |   Update On 2020-11-01 16:39:00 IST
புவனகிரி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:

புவனகிரி அருகே நந்தமேடு கிராமம் குளத்து மேட்டு தெருவை சேர்ந்தவர். ராஜேந்திரன். இவருடைய மனைவி வேம்பு (வயது45). இவரும் இவருடைய அக்கா அன்புக்கரசி என்பவரும் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (37), இவர் வாத்துகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அன்புக்கரசி நந்தமேடு ஏரி கரை பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சரவணன் தனது வாத்துகளுக்கு வைத்திருந்த அரிசியை ஆடுகளை தின்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சரவணனுக்கும், அன்புக்கரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இது குறித்து வேம்பு அளித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், சரண்ராஜ் (20), விநாயகமூர்த்தி (30), சதீஷ்குமார் (26) ஆகிய 4 பேரையும், சரவணன் அளித்த புகாரின் பேரில் விஜய் (22), ராஜேஷ் (27), சஞ்சீவி (29) ஆகியோரையும் கைது செய்தனர்.

Similar News