செய்திகள்
காட்பாடியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை - ஒருதலை காதலால் விபரீத முடிவு
காட்பாடியில் ஒருதலை காதலால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
காட்பாடி காந்தி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் திருமலைராஜன் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட திருமலை ராஜன் கடந்த 25-ந் தேதி இரவு வீட்டு கழிப்பறையில் இருந்த விஷத்தை (ஹார்பிக்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.