செய்திகள்
ஆர்ப்பாட்டம்

பா.ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-28 17:01 IST   |   Update On 2020-10-28 17:01:00 IST
தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே நகர் பா.ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை:

பெண்கள் குறித்து தவறான கருத்தை வெளியிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே நகர் பா.ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் தலைவர் பஞ்சநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி தலைவி கோமதி நாச்சியார் முன்னிலை வகித்தார்.இதில் நகர் பொதுச் செயலாளர்கள் பாலராம்குமார், வடிவேலு, நகர் மகளிர் பிரிவு தலைவி சுப்புலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News