செய்திகள்
தேனூரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
தேனூரில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதை(வயது 44). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த பயிர்களுக்கு தண்ணீர் மடையை திறந்து விட்டு, மின்மோட்டார் சுவிட்சை போட சென்றார். மின் சுவிட்சை தொட்டபோது எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், மருதையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.