செய்திகள்
ஆலங்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது
ஆலங்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் திருவள்ளுவர் சிலை அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த இடத்தில் கஞ்சா விற்ற கீரனூரை சேர்ந்த முஸ்தபாவை (வயது 26) போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.