செய்திகள்
நகை பறிப்பு

சீர்காழி அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

Published On 2020-10-26 09:37 GMT   |   Update On 2020-10-26 09:37 GMT
சீர்காழி அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழஆத்துக்குடி கிராமம் மாதாக்கோவில் தெருவை சேர்ந்தவர் ரொசாரி அடைக்லமேரி(வயது88). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பகுதியில் ஈரத்துணியை காய வைத்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News