செய்திகள்
திருவண்ணாமலை அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது
திருவண்ணாமலை அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்ட விருதாம்பாள் (வயது 35), மனவருத்தா (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.