செய்திகள்
சேத்துப்பட்டில் ஆட்டோ மோதி முதியவர் பலி
சேத்துப்பட்டு அருகே ஆட்டோ மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அருகே உள்ள மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சற்குணம் (வயது 70), விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் சேத்துப்பட்டு -ஆரணி சாலையில் உள்ள காமராஜர் பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். சாலையை கடக்க முயன்றபோது ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சற்குணத்தின் மகன் வெங்கடேசன் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.