செய்திகள்
திருவண்ணாமலை போலீசார் சார்பில் முககவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படம்
திருவண்ணாமலை போலீசார் மூலம் முககவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்திற்கு இணையாக மாவட்ட காவல் துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முகக்கவசம் அணிவதை போலீசார் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை போலீசார் மூலம் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த வீடியோ பதிவில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.