செய்திகள்
தற்கொலை

கந்திகுப்பம் அருகே பெண் தற்கொலை

Published On 2020-10-21 09:22 GMT   |   Update On 2020-10-21 09:22 GMT
கந்திகுப்பம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

கந்திகுப்பம் அருகே உள்ள எலத்தகிரி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேரி (வயது55). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மேரி, நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News