செய்திகள்
ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
தர்மபுரி ராஜபேட்டையைச் சேர்ந்தவர் மணி (வயது 41). இவர் ஓசூர் பேகேப்பள்ளி எழில் நகரில் குடியிருந்து, தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடன் தொல்லை காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.