செய்திகள்
ராயக்கோட்டை அருகே மதுபோதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து - தொழிலாளி கைது
ராயக்கோட்டை அருகே மதுபோதையில் வாலிபரை கத்திக்குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூரை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 28). அதே ஊரைச் சேர்ந்தவர் சுகுமார் (39). கூலித்தொழிலாளர்கள். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் நெல்லூரில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சுகுமார், கத்தியால் வெங்கடாசலபதியை குத்தினார். இதில் காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை கைது செய்தனர்.