செய்திகள்
கைது

நாகை அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது

Published On 2020-10-20 06:36 GMT   |   Update On 2020-10-20 06:36 GMT
நாகை அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பசுபதி (வயது 60) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.
Tags:    

Similar News