செய்திகள்
மாயம்

நாகை காப்பகத்தில் இருந்து மகனுடன் பெண் மாயம்

Published On 2020-10-19 13:50 GMT   |   Update On 2020-10-19 13:50 GMT
நாகை காப்பகத்தில் இருந்து மகனுடன் பெண் மாயமானார். இது குறித்து காப்பக மேலாளர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:

நாகை சாமந்தன்பேட்டை பகுதியில் பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. நாகை மாவட்ட சமூகநலத்துறை பரிந்துரைப்படி விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் எட்டுக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஸ்வரி (வயது 37), அவரது மகன் சிவராமன் (4) ஆகியோர் கடந்த 2 மாதங்களாக இங்கு தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் சம்பவத்தன்று காப்பக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது மகேஸ்வரி தனது மகனுடன் காப்பகத்தில் இருந்து திடீரென மாயமானார். 

இதுகுறித்து காப்பக மேலாளர் அமிர்தவள்ளி கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News