செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சி.ஆர்.பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முரளிமோகன் (வயது 40), சதாசிவராஜ் (53), அஸ்வத்ரெட்டி (73), சலாம் (60), மதுசூதன் (23) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார், கெலமங்கலம் சந்தை மைதானம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஜீவா நகர் பகுதியை சேர்ந்த நசீம்(20), விமல்(23), வெங்கடேஷ்(23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.