செய்திகள்
ஆறுமுகசாமி ஆணையம்

மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டது ஆறுமுகசாமி ஆணையம்

Published On 2020-10-17 20:19 GMT   |   Update On 2020-10-17 20:19 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.
 
தொடர்ந்து சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. வரும் 24-ம் தேதியுடன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அவகாசம் முடியும் நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9-வது முறையாக அவகாசம் கேட்டுள்ளது.
Tags:    

Similar News