செய்திகள்
மழை

18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-10-16 09:11 GMT   |   Update On 2020-10-16 09:11 GMT
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக சின்னகல்லார், பாபநாசம், வால்பாறையில் தலா 3 செ.மீ., தென்காசி, சோலையாரில் தலா 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News