செய்திகள்
கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்ததால் மாணவி விஷம் தின்று தற்கொலை
கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி பிடாரி கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் ரோகிணி (வயது 18). இவர் 12-ம் வகுப்பு முடித்து கல்லூரி செல்வதற்காக பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது, கொரோனா கால நேரம் என்பதாலும், குடும்ப வறுமை காரணமாகவும் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த ரோகிணி கடந்த 9-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தார்.
இதைபார்த்த ரோகிணியின் தாயார் கலையரசி மகளை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி பிடாரி கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் ரோகிணி (வயது 18). இவர் 12-ம் வகுப்பு முடித்து கல்லூரி செல்வதற்காக பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது, கொரோனா கால நேரம் என்பதாலும், குடும்ப வறுமை காரணமாகவும் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த ரோகிணி கடந்த 9-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தார்.
இதைபார்த்த ரோகிணியின் தாயார் கலையரசி மகளை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.