செய்திகள்
திருட்டு

ஓட்டலில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் திருட்டு

Published On 2020-10-13 09:51 GMT   |   Update On 2020-10-13 09:51 GMT
ஓட்டலில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:

மதுரை ஆரப்பாளையம் ஏ.ஏ.ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 29), அந்த பகுதியில் ஓட்டல் வைத்திருக்கிறார். சம்பவத்தன்று இவர் இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை மூடி விட்டு மறுநாள் காலை வந்தார். அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற போது அங்கு வைத்திருந்த 2 கியாஸ் சிலிண்டர்களை காணவில்லை. மர்மநபர்கள் அதனை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News